October 16,2021. Saturday நீங்கள் குறைந்தபட்சம் செய்ய முடியாவிட்டால்!

 நீங்கள் குறைந்தபட்சம் செய்ய முடியாவிட்டால்!




                         லூக்கா எழுதிய நற்செய்தியில், இயேசு கவலைப்படுவதைப் பற்றி பேசினார். இதே சூழல் மத்தேயு நற்செய்தியிலும் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட நற்செய்தியில், லூக்கா இயேசுவின் கேள்வியைக் குறிப்பிடுகிறார். "உங்களால் குறைந்தபட்சம் செய்ய முடியாவிட்டால், நீங்கள் ஏன் மற்றவைகளுக்காக கவலைப்படுகிறீர்கள்?" கவலையாக இருப்பது நமக்கு பழக்கம். கவலைப்படாமல் இருக்க நாம் முடிந்தவரை முயற்சி செய்தாலும், நம்மால் அது முடியாது. நம் அன்றாட வாழ்வில், எப்போதும் நம்மை கவலையடையச் செய்ய ஏதாவது ஒன்று உள்ளது. நாம் கவலைப்பட ஒன்றுமில்லையென்றாலும், வேறு யாராவது நம் வாழ்வில் விஷயங்களை கொண்டு வந்து நம்மை கவலையடையச் செய்கிறார்கள். ஆனால், நாம் ஏன் உண்மையில் கவலைப்படுகிறோம்? ஏனென்றால் இயேசு சொன்னது போல நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது.

       எப்போதாவது, நான் ஒரு பிரச்சனையைப் பற்றி கேட்கும்போது, ​​நான் முதலில் நினைப்பது, "நான் என்ன செய்ய முடியும்?" நான் ஏதாவது செய்ய முடிந்தால், நான் உடனடியாக அதை செய்வேன். இணைப்புகளை ஏற்படுத்த அது ஒரு தொலைபேசி அழைப்பாக இருக்கலாம் ; பணம், என்னிடம் இருந்தால் பண உதவி. மேலும், இப்போதைக்கு எந்த வகையான உடல் அல்லது தார்மீக ஆதரவோ அதை செய்வேன். ஆனால், துன்பப்பட்டவர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தவுடன், அதை குறித்து கவலைபடுவேன். வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால், என் ஆத்மா சிறிது நேரம் கவலைப்படுகிறது. நிச்சயமாக இது எதையும் மாற்றாது. நான் போதுமானஅளவு கவலைப்பட உடன், ​​ஒரு பெரிய பெருமூச்சு விட்டு, "சரி, இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது, இறைவனால் மட்டுமே இதை மாற்ற முடியும்" என்று கூறி என்னை அமைதிப்படுத்திகொள்ளுவேன். பிறகு நான் கவலைப்பட்ட விஷயங்களுக்காக ஜெபிப்பேன். அது மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

           இயேசுவின் கேள்வி எனக்கு எப்போதும் விசித்திரமாக இருக்கும். நம் சொந்த வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் நடக்கும்போது எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? ஆனால் இந்தச் சொல் எனக்கு வெளிச்சத்தைக் கொண்டுவந்தது, சில சூழ்நிலைகளில் நாம்மாள் குறைந்தபட்சம்கூட செய்ய முடியாது, கவலைப்படுவது கூட உதவாது. எனவே, கவலைப்படவோ அல்லது கலக்கம் அடைய வேண்டாம் என்று கர்த்தர் நமக்கு அறிவுறுத்தியுள்ளார், ஆனால்நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமள், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”(பிலிப்பியர் 4: 6)

கவலைப்படுவதை நிறுத்துவது எளிதல்ல, ஆனால் நாம் வேண்டுமென்றே செய்ய வேண்டிய தேர்வு இது. கவலை படுவதை விட்டு விட்டு அதிகமாக ஜெபம் செய்யுங்கள். 

Comments

Popular Posts